எனக்கு சொல்லிச் சொல்லி அலுத்துப்போச்சு. ஆனாலும் சொல்றேன். கலைஞர் ஆட்சில இருக்கப்போ கருணாநிதி, கருணாநிதி, கருணாநிதினு கத்துவாய்ங்க. ஜெயலலிதா ஆட்சில இருந்தா தமிழக அதிகாரிகள், தமிழக போலீஸ், தமிழக அரசுனு பம்முவாய்ங்க. முந்தாநாள் திருமுருகன் காந்தி 2009ல கருணாநிதி அரசு போராட்டங்களை எப்படியெல்லாம் முடக்குச்சுனு விவாதத்துக்கு சம்பந்தமே இல்லாம நீட்டி முழக்குனாரு. சரி இன்னைக்கு ஜெயலலிதா வேலூர்ல இருந்து துவங்க வேண்டிய பேரணிக்கு அனுமதி தராம சென்னை எக்மோர்ல இருந்து வாங்கடா பசங்களானு உத்தரவு போட்ருக்காங்க. சரி ஏதாவது பொங்கியிருப்பாருனு பாத்தா ஜெயலலிதான்ற வார்த்தையே அவரு சுவர்ல இல்ல. திருமுருகன் ஒரு உதாரணம் தான். நெடுமாறன், வைகோ, சீமான், தமிழருவினு எல்லா துண்டுதுக்கடாவும் இதே ரகம்தான். என் மானமிகு, மதிமிகு தமிழக மக்களே… கலைஞரை நம்புங்கள். பிடிக்கவில்லையென்றால் தாராளமாக ஜெயலலிதாவை நம்புங்கள். ஆனால் இந்த சுயநல சில்லறைகளை நம்பாதீர்கள். பிணங்கள் தான் இவர்களின் முதலிடே. அதிலும் நெத்திக்காசை திருடிவிட்டு பிணத்தை வல்லூறுகளிடம் விற்கும் மனசாட்சியற்றவர்கள் இவர்கள். தயவுசெய்து இவர்களை நம்பாதீர்கள். புரண்டழுது பிச்சைக்கேட்டாலும் காசு கொடுக்காதீர்கள். அதற்கு பதில் யாரேணும் பிச்சைக்காரனுக்கு சோத்துப் பொட்டலம் வாங்கிக்கொடுங்கள். வயிறார வாழ்த்துவான்
இந்த வலைப்பதிவில் தேடு
மக்களே... கலைஞரை நம்புங்கள். பிடிக்கவில்லையென்றால் தாராளமாக ஜெயலலிதாவை நம்புங்கள்
மக்களே... கலைஞரை நம்புங்கள். பிடிக்கவில்லையென்றால் தாராளமாக ஜெயலலிதாவை நம்புங்கள்
Reviewed by Tamilan Abutahir
on
5:07 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக