தமிழ் நட்டு மக்களின் பிரச்சனை, இன்றே கட்சிக்குள் துவங்கியது வன்முறை. நாளை தமிழ் நாட்டிலா ?
MGR ரால் தோற்றுவிக்கபட்ட கட்சி AIADMK இன்று இந்த நிலைமையில்
இருப்பதற்கு காரணம் ஜெயலலிதாவே தான், ஜெயலலிதாவின் வீட்டு வேலைகளையும் அவரின் சொந்த வேலைகளை கவனித்து கொள்ள மட்டும் தானே சசிகலா நியமிக்க பட்டார் ? அதை யாரும் மறுக்க முடியாது, ஏன் என்றால் ஜெயலலிதாவே ஆங்கில காணொளி பேட்டி நடத்திய சிமி க்ரேவால் அவர்கள் சசிகலாவை பற்றி கேட்ட பொழுது அதை தானே ஜெயலலிதா சொன்னார்கள் ? பாகம் 2 டை பார்க்கவும். ஜெயலலிதா செய்த பெருந் தவறு சசிகலாவிற்கு நாளடைவில் மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தார். இது ஜெயலலிதா கட்சிக்கு இழைத்த முதல் தவறு. இந்த தவறை சசிகலா நிதானமாக ஆணித்தரமாக பயன்படுத்தி கொண்டு இன்று அண்ணா திமுகாவை ஆட்டி படைக்ககிறார். ஜெயலலிதாவிற்கு தனது உடல் நிலை பற்றி நன்கு அறிந்தும் கட்சியின் தலைமை வாரிசு யார் என்று அறிவிக்கவில்லை. இது ஜெயலலிதா கட்சிக்கு இழைத்த இரண்டாம் தவறு. இவைகளின் விளைவு சசிகலா மற்றும் அவரது குடும்ப வளைர்சிக்கு விதையாகி விட்டத்து. எம்ஜிஆர் அவர்களாவது ஜெயலலிதாவை கட்சி கொள்கை பரப்பு செயளாராக நியமித்தார் பின்னர்பின்னர் அது கட்சி தலைமை தாங்க வழிவகுத்தது. ஆனால் யார் இந்த சசிகலா? இவர் எப்பொழுது கட்சியின் அங்கத்தினரானார் 1972 அல்லது 1982 ? கட்சியில் சசிகலாவின் பொறுப்பு என்ன ? கட்சிக்கு இவரது பங்கு என்ன ? கட்சிக்காக சசிகலா உழைத்து என்ன? காவேரி பிரச்சனையில் ஜெயலலிதாவுடன் சசிகலா உண்ணாவிரதமாவது இருந்தாரா ? சசிகலா என்றைக்காவது ஒரு நாள் தேர்தல் மேடையில் பேசியதுண்டா ? கட்சிக்காக சசிகலா தேர்தல் வாக்கு சேகரித்தாரா ? ஜெயலலிதா எங்கு சென்றாலும் சசிகலா அவருடன் பின்புறத்தில் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் தானே இருந்தார். எந்த நிலையிலும் அவர் ஒரு நாளும் வாயினாலும் சைகையினாலும் பேசியதை யாருமே பார்த்து இருக்க முடியாதே. அப்படி இருக்கையில் சசிகலா அவர்கள் ஜெயலலிதாவிற்கு என்னவாக இருந்து இருக்க முடியும் ? ஆனால் நிலைமையே மாறிவிட்டது. எம்ஜிஆரின் கடின உழைப்பால் வளர்ந்து தமிழகத்தை ஆண்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று கட்சிக்கு சம்மந்தமே இல்லாத சசிகலா குடும்பத்தினர் கட்சியையே முழுமையாக சொந்தம் கொண்டாட இறங்கிவிட்டார்கள். MGR காலத்தில் இருந்து அனுபவமிக்க மந்திரிகள் MP MLAகள் மற்றும் தொண்டர்களுக்கு இல்லாத அரசியல் அறிவு அனுபவம் சசிகலாவிடம் மட்டும் உள்ளதா ? இவர்கள் சசிகலாவிடம் சென்று கட்சி தலைமை ஏற்க கெஞ்சுவது எதை காட்டுகிறது? அவர்கள் அனைவரும் 1972இல் இருந்து அரசியல் அறிவு திறமை இல்லாத ஞன மற்றவர்களாகவும் டம்மி பிஸ்களாக இருந்தும் இப்பொழுதும் இருந்து கொண்டும் இருக்கிறார்கள் என்றும் நேற்று வந்த சசிகலாவிற்கு அதிக ஞானம் உண்டு என்று தானே அர்த்தம் ? எம்ஜியாரால் தோற்றுவிக்க பட்ட கட்சி இன்று இந்நிலையில் இருப்பதின் காரணம் சந்தர்ப்பவாதிகள் பணத்திற்கும் பதவிக்கும் உறுதுணையாக சசிகலாவுக்கு இருந்து அவரை சின்னாம்மா என்று அழைக்கும் அளவிற்கு சென்று விட்டார்கள். விரைவில் புரட்சி சின்னமா என்ற அடை பட்டத்தையும் வழங்கி பின்னர் டாக்டர் புரட்சி சின்னமா என்று அழைப்பார்கள். இவை அனைத்தும் கட்சியின் பிரச்சனை. ஆனால் கட்சியின் பிரச்சனை தமிழ் நாடுக்கு பாதிப்பு உண்டு. இவர் ஆட்சிக்கு வந்து விட்டால் தமிழ் நாட்டில் அரசு புறம்போக்கு என்ற நிலங்கள் அணைத்தும் வருவாய் துறை பதிவேடுகளில் இருந்த மறைந்து விடும். பொதுத்துறையிலும் அரசு வணிக கழகம் பெரும் பங்கு இவர்கள் கையில் தான் இருக்கும். பாதிக்கப்பட போகிறது தமிழ் நாட்டு மக்கள் தான். ஊழல் தலை தெறிக்க ஆடும். அதுதான் தமிழ் நட்டு மக்களின் பிரச்சனை.இன்றே கட்சிக்குள் துவங்கியது வன்முறை. நாளை தமிழ் நாட்டிலா ???
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழ் நட்டு மக்களின் பிரச்சனை, இன்றே கட்சிக்குள் துவங்கியது வன்முறை. நாளை தமிழ் நாட்டிலா?
தமிழ் நட்டு மக்களின் பிரச்சனை, இன்றே கட்சிக்குள் துவங்கியது வன்முறை. நாளை தமிழ்
நாட்டிலா?
Reviewed by Tamilan Abutahir
on
3:04 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக