ஜெயலலிதா இருந்த போதும் பினாமி முதல்வர். இறந்த போதும் பினாமி முதல்வர் என்றால்
ஆட்சியாளர்களின் ஊழல்களையும், சட்ட விரோத செயல்களையும் அதற்கு இணக்கமாக செயல்படுபவர்களையுமே ஆட்சிக்கு வரும் ‘கட்சி அரசியல்வாதிகள்’ தலைமை செயலாளராக நியமித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்ற போது தனது ஆட்சியின் தலைமை செயலாளராக ‘ராம் மோகன் ராவ்’ என்பவரை நியமித்தார்.
தலைமை செயலாளர் ஆவதற்கான தகுதி அடிப்படையில் ‘ராம் மோகன் ராவ்’ நியமிக்கப்படவில்லை. அவரைவிட தகுதியும் அனுபவமும் மிக்க நேர்மையான அதிகாரிகள் 1981 ஆம் ஆண்டு பிரிவில் 22 பேர்கள் உள்ள நிலையில், 1985 ஆம் ஆண்டு பிரிவில் 13வது நபரான ராம் மோகன் ராவ்வை ஜெயலலிதா எதற்காக தேர்ந்தெடுத்தார்?
“சோனியாவுக்கு கிடைத்த பினாமி மன்மோகன் சிங் போன்று ஜெயலலிதாவுக்கு கிடைத்த பினாமி பன்னீர் செல்வம். அத்வானிக்கு பினாமி மோடி.”
பினாமிகளாக அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு என்று சில குணங்கள் இருக்க வேண்டும். அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நன்றியுள்ள நாய் போன்று அவர்களை சுற்றித் திரிய வேண்டும். எப்போதாவது எலும்பும் துண்டு போன்று சில அதிகார பதவிகளை அரசியல்வாதிகள் தூக்கி போடுவார்கள். அதைக் கவ்விக் கொள்ள வேண்டும். அந்த பதவியின் அதிகாரத்தை அந்த அரசியல்வாதிகளுக்காக சட்டங்களையும் வளைத்து நெளித்து அரசியல்வாதிகளுக்கு ஏற்றார் போல் சட்ட விரோத செயல்களை சட்ட ஆதரவுடன் நடப்பதாக காட்ட வேண்டும்.
இந்த பினாமிகளில் மோடிக்கும், பன்னீர் செல்வத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே டீ கடையில் வாழ்க்கையை ஆரம்பித்த பாமர மனிதர்கள். படிப்பறிவற்றவர்கள். மோடிக்கு கிடைத்த பதவி பிரதமர். பன்னீருக்கு மட்டும் எப்போதுமே எடுபிடி முதல்வர்.
பாருங்கள்….. “ஜெயலலிதா இருந்த போதும் பினாமி முதல்வர். இறந்த போதும் பினாமி முதல்வர் என்றால்….”
நேற்று முன்தினம் இந்த எடுபிடி முதல்வர் பினாமி பிரதமரை சந்திக்கிறார். அப்போதே ஜெயலலிதாவின் இருட்டுக்குள் நடந்த மறுபக்க அரசியலின் ஆவணங்கள் அனைத்தும் மோடியிடம் கொடுக்கப்பட்டுவிட்டன. அதற்கு பிறகே தமிழ்நாட்டுக்குள் இராணுவ பாதுகாப்போடு தலைமை செயலகத்திற்குள் ராம் மோகன் ராவ் அறைக்குள் விசாரணை. அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் தனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் பினாமி முதல்வர் தலைமை செயலகத்தை விட்டு வெளியேறுகிறார். இது ஒட்டு மொத்த மக்களாட்சிக்கு எதிரான தலைகுனிவு.
தமிழ்நாட்டுக்குள் நடத்திய இதே அணுகுமுறையை மோடி மேற்கு வங்காள முதல்வர் மம்தா தலைமை செயலகத்திற்குள் இராணுவ பாதுகாப்புடன் சோதனையிட உள்நுழைந்த போது தலைமை செயலகத்தின் கதவை பூட்டு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார் அந்த பெண் முதல்வர். அது எதிர்புணர்ச்சி. பயந்து போன மோடி ஓடிப்போனது மட்டுமல்ல அவமானப்பட்டதும் அங்கேதான். ஆனால் தமிழ்நாட்டு பினாமி முதல்வர் ஆள்காட்டி வேலையைத்தானே செய்து கொண்டிருக்கிறார்?
ஆயிரம் இருந்தால் என்ன? அவர் பச்சை தமிழர் என்பதால் அவரை ஆதரிப்போம் என்று போலி தமிழ் தேசியவாதி சீமான் போன்ற குள்ள நரிகள் ஆதரிக்கவும் செய்கிறார்கள்.
இப்போது புது தலைமை செயலாளராக மாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த மாமி எஸ்.வி.சேகர் (பா.ஜ.க) ஆத்து உறவுக்காரர். இந்த மாமியை யார் தமிழக செயலாளராக நியமித்தார்கள் என்று சில மணி நேர குழப்பத்திற்கு பிறகு தமிழக கவர்னர் நியமித்தார் என்று செய்தி வருகிறது.
கவர்னருக்கு அந்த அதிகாரம் இல்லையே என்று இப்போது சர்ச்சைகள் வலுத்துள்ள நிலையில், கிரிஜா தமிழ் பேசும் பார்ப்பனத்தி. ‘தமிழ் பேசும் பார்ப்பனரும் தமிழரே’ என்று இப்போதும் சீமான் போன்ற அரை வேக்காடுகள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
ஆனால் இந்த மாமி பா.ஜ.க உளவாளி. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பா.ஜ.கவின் விசுவாசிசாக இருந்து இனி ஆட்டி வைக்கப் போகும் பார்ப்பனீய சூத்திரத்தாரி.
இப்போதும் இந்த ஆரியர் / திராவிடர் எதிர்ப்பு அரசியல் தமிழர்களுக்கு பிடிபடவில்லை என்றால் மீண்டும் முதல் பத்தியை வாசித்து பாருங்கள்.
ஜெயலிலதா, சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக மட்டுமே தனக்கு இணக்கமான நபரை தேர்ந்தெடுத்தார். ஆனால் கிரிஜா என்ற தேர்வு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவின் பின்புலம் அதிபயங்கரமானது. அதன் அரசியல் மத/சாதி/மனிதநேயத்திற்கு எதிரானதாக உருவெடுத்து ஜனநாயகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழீனத்தையும் நாசப்படுத்திவிடும்.
#தமிழச்சி
23/12/2016
இந்த வலைப்பதிவில் தேடு
ஜெயலலிதா இருந்த போதும் பினாமி முதல்வர் இறந்த போதும் பினாமி முதல்வர் என்றால்
ஜெயலலிதா இருந்த போதும் பினாமி முதல்வர் இறந்த போதும் பினாமி முதல்வர் என்றால்
Reviewed by Tamilan Abutahir
on
3:02 AM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக