Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

பார்பனர்கள்கள் தமிழர்களா?

பார்பனர்கள்கள் தமிழர்களா?

பார்பனர்கள்கள் தமிழர்களா?  கும்பகோணம் மடத்தின் தலைவர் காஞ்சி பெரியவர்
தமிழை நீசமொழி என்றார் சமஸ்கிருதம் மட்டுமே தெய்வத்தோடு பேசும் மொழி என்றெல்லாம் தெய்வத்தின் குரலில் அளந்தார்
ஆனால் பார்பனர்கள் தங்களை தமிழர்களாக தேசியளவில் முன்னிறுத்தினாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஏச மறப்பதில்லை தமிழர்களை அவர்கள் தங்களின் பிரதான எதிராளியாகவே கருதுகிறார்கள் காரணம் அவர்கள் தங்களின் கோட்பாட்டிற்குள் வருவதில்லை/ அடைக்கமுடியவில்லை
பாஜக வின் ராகவனும் பத்ரியும் தமிழை எப்படி காட்டுமிராண்டி மொழியென்று பெரியார் சொல்லலாம் கூடவே எங்கள் #தமிழ்மொழி என சேர்த்துக்கொள்கிறார்கள்..
..
#பெரியார்
முதலில் மிகதெளிவாக சொன்னார்..
மொழியில் சீர்திருத்தம் செய்யாமல் எந்த மொழியும் வளராது..சமகாலத்திற்கு பொருந்துகிறார்ப்போல் வடிவமைக்கப்படாமல் இருப்பதைதான் பெரியார் குறிப்பிட்டார் ..
பெரியார் சீர்திருத்தம் செய்த தமிழ் மொழியின் எழுத்துக்கள் தான் இந்த கணணி யுகத்திலும் இலகுவாக பயன்படுத்த முடிகிறது..
தமிழைப்படித்து விட்டு சாமியாராக போனவர்கள் அதிகம் பட்டினத்தார் தாயுமானவர், வள்ளலார் போன்றோர்..அதையும் பெரியார் பலஇடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்..
தமிழ் படித்து விட்டு மடமை பேசியவனே அதிகம் யாரும் பகுத்தறிவு பேசவில்லை என்றும் குட்டுவைத்தார் பெரியாரை ஒரு பிரேமிற்குள் அடைத்துவிடமுடியாது அவர் தனக்கு மொழிப்பற்றோ இனப்பற்றோ நாட்டுபற்றோ இல்லை இருப்பதெல்லாம் மானுடப்பற்று என்று சொன்னவர்..

பாப்பான்கள் எப்படி தமிழர்களாக முடியும்?

விடயத்திற்கு வருவோம்..
பாப்பான்கள் எப்படி தமிழர்களாக முடியும் #இனத்தால்..தமிழனில்லாத ஆரியர்கள்..
வடமொழி கலப்பிலேயே பேசும் சமஸ்கிருதத்தை பேச்சுவழக்கில் தமிழோடு கலக்கும் ..இவர்கள் தமிழர்கள் அல்லர்..
தமிழ் மொழி பேசுவதால் மட்டுமே தமிழன் என்று பொருள்கொள்ளமுடியாது..
எனக்கு ..ஆங்கிலம் தெரியும் பிரஞ்சு தெரியும் எனவே நான் ஆங்கிலேயன் பிரஞ்சுகாரன் என ராகவன் கோஷ்டி சொல்லுமா

புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாப்பானை.. இப்படிதான் பாடினார்
புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாப்பானை.. இப்படிதான் பாடினார்..
#அண்டிப்பிழைக்க_வந்தஆரியக்கூட்டம்
#பெரியார் பாப்பான் என்றே அழைக்கவும் சொன்னார் பிராமணன் என்றெழ்த்தால் நாம் அவன் சொல்லும் நால்வர்ண கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவராவோம் அவன்
நம்மவன் இல்லையென்றார்.. தன்னை தமிழனென சொல்லி திரிகிறான் அதிலிருந்து வேறுபட்டு இனங்கானவே திராவிடன் என்ற சொல்லி பயன்படுத்தியதாகவும் சொன்னவர் பெரியார்
..
#பாப்பான்..
தமிழ் இனத்தின் பிரதான எதிரி..
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ..இனத்தின் பெருமைக்கு மிகப்பெரிய இடையூறாய் இருக்கும் இவர்கள் எப்படி தமிழர் ஆவார்கள் தொடர்ந்து தமிழர்களை கிண்டல் செய்வதும் தங்களை உயர்வாக எண்ணி மகிழ்வதும் ஒருவகை மனநோய்
..
தமிழ் செம்மொழியாவதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தவனும் பாப்பான் தான்.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட போது தினமலர் இனி விலைவாசி குறைந்து விடும் என கிண்டலடித்தது குறிப்பிடதக்கது செத்த மொழி சமஸ்கிருதத்தை உயர்த்திபிடிக்கவே மும்மொழியென பெயரில் ஏதேனும் ஒன்றை கற்கலாமென சொல்லி .. பிற மொழிக்கு ஆசிரியர் கிடைக்கவில்லையென கதையடித்து சமஸ்கிருதத்தை திணிக்க முயல்கிற முயற்சிதான் இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் ..
அதேபோல்
ஹிந்தி மொழியில் இரண்டே இலக்கியம் தான் ராமாயணமும் ரெயில்வே கைடும் என்றார் அண்ணா.. மொழி வளமில்லாத தனக்கென்று தனி இலக்கணமில்லாத உருது மற்றும் ஹிப்ரூ மொழி வளத்தை தனக்காக்கி கொண்ட பேசும் மொழி ஒருநாட்டின் பொதுமொழி என்பது கையிருப்பு இல்லாமல் கதையளப்பதைப்போல சிதைந்து போகும் மொழி உயர்ந்ததெனில் விரும்பி கற்பார்கள் பிழைப்பிற்காக எனில் அதில் எந்த பயனும் ஏற்படபோவதில்லை ..
..
தமிழ் மீதும் தமிழர்கள் மீது தீராபகை கொண்டு திரியும் பார்புகளை அறிவுக்கொண்டு வெல்வோம்
#எம்மொழி_செம்மொழி ..
..
ஆலஞ்சியார்

பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா

பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா

இப்போதும் பொருந்துகிறது ரஞ்சித் போன்றவர்களின் அறியாமை யை காணும் போது
பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம்.. நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா என்கிறார் இளம் இயக்குனர் ரஞ்சித்
ஏன் அண்ணலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் அண்ணல் அம்பேத்கர் மீது மரியாதை உண்டு .. ஒடுக்கபட்ட சமூகத்திலிருந்து உயர்ந்த பதவிகளை தன் திறமை மூலம் பெற்றவர்.. தான் பிறந்த மதத்தின் இழிவுகளை போக்க தன் சார்ந்த மக்களை புத்தமதம் தழுவ செய்தால் புனிதராகிவிடலாமென்ற நினைத்து மாறியவர்
அதிலிருந்தே தான் தாழ்ந்தவர் என்ற எண்ணம் கொண்டிருந்தாரென அறிய முடிகிறது..
தான் சார்ந்த சமூக பின்னணியில் இருந்து மிகப்பெரிய மாற்றத்தை வடமாநிலங்களில் குறிப்பாக மராட்டியத்தில் அவரால் கொண்டுவர முடியவில்லையே வெகுமக்களை ஒருங்கிணைக்காத
அல்லது வெகுமக்கள் ஆதரவில்லாத எதுவும் எந்த மாற்றத்தையும் தர முடியாது.. ஆனாலும் அம்பேத்கர் வாழ்க என்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆனால் பெரியாரை நாங்கள் ஏற்கவேண்டுமெனில் ஜெய்பீம் என அழைக்க வேண்டுமென்ற நிபந்தனை நிச்சயமாக தலித் மக்களை வெகு தூரத்தில் வைக்கவே பயன்படும்
இப்போது மெச்சபட்டிருக்கிற நிலை பெரியாரின் கைத்தடி தந்தது என்பதை உணரவேண்டும்.. தோளில் துண்டை போட கூட அனுமதிக்காத சமூக சூழலை மாற்றி ..
பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தது திராவிடம்.. வாடா முனியா என்றழைத்த காலத்தில் மேடை போட்டு முனியாண்டி அவர்களே என விளித்து பழக சொன்னது திராவிடம்.. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமில்லாமல் நாடும்,இனமும் முன்னேறாதென்ற நம்பிக்கையில் உரத்து நின்றது பெரியாரும் திராவிடமும் தான்..
..
தெளிவு போதாமை அல்லது சிறிய வெற்றியின் மமதை இவ்வாறு பேச வைத்திருக்கிறது.. இதே இப்போது இந்த துணிவோடு தமிழகத்தில் கதைக்க முடிகிறதே ..அதற்கு காரணம் பெரியார் திராவிடம்.. இதே போல் மகாராஷ்ட்ராவில் பேசிவிட்டு நடமாட முடியாது .. அந்தளவிற்கு மிக கொடூரமான மனபோக்கை தலித்கள் மீது கொண்டிருக்கிறார்கள்..
குடியரசு தலைவரையே வெளியே நிறுத்துகிற சூழல்
இங்கே 52 லேயே பரமேஸ்வரனை அறநிலையத்துறை அமைச்சராக்கியவர் பெரியார் .. திலகர் உடலை தொட கூட காந்தியை அனுமதிக்காத வரலாறெல்லாம் படியுங்கள் ரஞ்சித்.. இரண்டு சினிமாவில் தலித்திய சிந்தனையை படமாக்கிவிட்டால் எல்லாம் அறிந்தவரென்றோ போராளியென்றோ நினைத்துக்கொண்டு களம் இறங்குகிறீர்
ஒடுக்கபட்ட மக்களுக்காக கால்நூற்றாண்டுக்கு மேலாக பாடுபடும் போராடும் தோழர்.திருமாவிடம் கேட்டுபாருங்கள் பெரியார் யாரென்று தெரியும்
பெரியாரை முன்னெடுக்காவிடில் பெரியாருக்கல்ல இழுக்கு
பெரியாரை முதன்மைப்படுத்த இவர் வேண்டுமென்பதில்லை.. தமிழகத்தில் பெரியாரை திராவிடத்தை கலைஞரை தாக்கினால் பெரிய ஆள் ஆகிவிடலாமென்ற பழைய வறட்டு சிந்தனையின் விளைந்தது தான் இந்த பெரியாரை ஏற்கிறோம் ஜெய்பீம் என சொல்ல தயாரா.. என கேட்பது..
..
பாசிசம் அஞ்சும் ஓரு பெயருண்டு.. இந்த பெயரை கேட்டாலே பாசிசத்தின் குலைநடுங்கும் ..அந்த பெயர் பெரியார்.. ஆனால் ஜெய்பீம் என சொல்லி பாருங்கள் கடித்து குதறிவைக்கும் .. அண்ணல் அம்பேத்கர் அறிவாளி என்பதில் மாற்றுகருத்தே இல்லை ஆனால் .. நல்ல அரசியல் தலைவராகவோ..
தொலைநோக்கு சிந்தனையாளராகவோ.. மக்களின் நாடிதுடிப்பை அறிந்து அவர்கள் மனதை மாற்றியவரில்லை.. ஆனால் பெரியார் .. பிராமணீயத்தின் (ஆரியத்தின்) ஆணிவேரையே அசைத்தவராக.. சமூகநீதிக்காக.. சமநீதிக்காக.. ஒவ்வொரு விடயத்திலும் தொலைநோக்கோடு சிந்தித்து கல்வி வேலைவாய்ப்பு கருத்து சுதந்திரம் பெண்கள் கல்வி அவர்களின் உரிமை என எல்லா படித்தளங்களிலும் கவனம் செலுத்தி புதியதொரு விடியலை தந்தவர்.. நாடு விடுதலை அடைந்ததையே கறுப்புநாளென்றவர்.. சமூகவிடுதலை இல்லாமல் நாடு விடுதலை அடைந்து பயனில்லை என்றவர்.. பெரியார் தொலைநோக்கி..
..
எங்களுக்கு பெரியார் போதும்.. நீங்கள்
ஜெய்பீமையே முன்னெடுங்கள்.. அப்போது தெரியும் .. பெரியாரின் மேன்மை தளர்ந்து விழும் போது தூக்கி நிறுத்த ..ஆம்..
கடைசியில் பெரியார் தான் வந்து நிற்பார்
..
ஆலஞ்சியார்

இலங்கை முஸ்லிம்கள் அரபு மொழியை பயன்படுத்த கூடாது

இலங்கை முஸ்லிம்கள் அரபு மொழியை பயன்படுத்த கூடாது

இலங்கை முஸ்லிம்கள் எந்த சூழ்நிலையிலும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் அரபு மொழியை பயன்படுத்த கூடாது என்று இலங்கை அரசு ஆணை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
மிகவும் மடமையான செயல் எந்தவொரு மொழியும்
அதன் வளமும் பிற மக்களோடு தொடர்பினை ஏற்படுத்தவே தவிர மொழி தீவிரவாதமாகாது .. எந்த மொழி திணிப்பையும் எப்படி ஏற்பதில்லையோ அதைப்போல அந்தந்த மொழி அறிந்தோர் அதன் பயன்பாட்டை நிறுத்தவேண்டுமென சொல்வது அறிவுடை செயல் அல்ல..
இஸ்லாம் அரபுமொழி என்றாலே அது தீவிரவாதத்தின் வாசலென கட்டமைக்கபட்டிருப்பதற்கு ஒருவகையில் அந்த மொழி வழக்கை கொண்ட மதபோதகர்களின் செயல்பாடும் இஸ்லாத்தை அரபி மொழியோடு மட்டுமே தொடர்புபடுத்தியதும் அதை ஒரு “புனித” நிலைக்கு கொண்டுபோய் வைத்ததும் காரணம் .. இஸ்லாம் பயங்கரவாதத்தை எங்குமே எடுத்தியம்பாத போது சிலர் தங்கள் அதிகாரவரம்பை நிலைநிறுத்த செய்த செயல்கள் அதற்கு வேதத்தை .. எது எப்போது எந்த காலகட்டத்தில் இறங்கியது எதற்காக அதை செயல்படுத்தபட்டதென்ற அறிவின்மையால் .. நேரடி மொழியாக்கமென்ற பெயரில் அதன் உட்பொருள் அறியாமல் மேலெழுந்தவாரியாக மக்களிடையே திணிக்கப்பட்டதும்.. அதை தீவிரவாத மார்க்கமென வல்லரசுகள் நம்பவைத்ததும் இவர்களின் பழைய “புனித போர்” Holy War வேறொரு பரிணாமத்தை அடைந்து அதில் முஸ்லிம்கள் மீது உலகளாவியளவில் தீவிரவாதிகள் என்ற “அடைமொழி”யை வைத்துவிட்டார்கள் ..பொது சமூகம் ஒருவித பயத்தோடு இஸ்லாமியர்களை காண கூடிய சூழலை உருவாக்கியதில் சில வல்லரசுகளுக்கு உரிய பங்கு எவ்வளவோ அதிலும் சற்றும் குறையாமல் இஸ்லாமிய அமைப்புகளின் மத போதகர்கள் மதத்தை ரட்சிக்கவந்தவர்களென சொல்லிக்கொண்டோரின் பங்கும் உண்டு
..
மொழி என்பது ஒரு ஊடகம் .. சில மொழிகள் செத்தொழிந்து போயின காரணம் எந்தவொரு மொழியும் அதன் சிறப்பு இலக்கணத்தில் இருக்கவேண்டும் மக்கள் மொழியாக இருந்தால் அதை எந்த சக்தியாலும் அழித்திட முடியாது .. தமிழ் நிலைத்து நின்றதற்கு “திணைமரபு ” இலக்கணமே காரணம் .. சமஸ்கிருதம் செத்ததற்கு இலக்கணமில்லாததே காரணம் .. தெய்வமொழி என்பதாலோ.. நிலைத்திடாது அரேபிய மொழி அந்த மண்ணின் மொழி அதை மதத்தின் மொழியாக கருதியதால் இந்த இழிநிலை ..
வெகுமக்கள் பேசுகிற மொழியும் கூட..
..
ஜப்பான் மற்றும் சீன நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களில் அரபு மொழி எழுத்துக்களை பயன்படுத்தி சந்தை படுத்தி வருவதை நாம் அறிய முடிகிறது.. 54 நாடுகளில் பேசபடுகிற மொழி கீழைநாடுகளின் ஒருவித மதரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய மொழி பல்வேறு நாடுகளின் அலுவல் மொழியாகவும் இருக்கிற மொழியை இலங்கை போன்ற வளைகுடா பொருளாதாரத்தை பெரிதும்
நம்பியிருக்கிற நாட்டில் தடை என்பது கேலிகூத்காக முடியும்…எந்த ஒரு மொழியும் எப்படி பயங்கரவாத மொழியாக அமைய முடியும் அதற்கான சாத்தியங்கள் எவ்வாறு ஏற்படும் என்கிற சராசரியான அறிவு கூட இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு இல்லை என்று தான் நாம் கூற முடியும். இதன் பின்னில் குறிப்பாக சில பௌத்த துறவிகள்..? இது போன்ற வெறுப்பு தன்மைக்கு காரணம் என்று ஸ்ரீ லங்கா மீடியாக்கள் கருத்து தெரிவித்துள்ளன
..
#மொழி
..
ஆலஞ்சியார்

திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா

திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா

எப்படியும் வீழ்த்திவிடவேண்டுமென கங்கணம்கட்டி செயல்பட்டாலும் திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா ..
அடித்தளம் சரியாக கட்டபட்டிருக்கிறதென்றார் அண்ணா
..
எத்தனை சூதுகள் நயவஞ்சகங்கள் கூடஇருப்போரையே கூர்தீட்டி எம்மிடமே திருப்பிய தந்திரங்கள் தாங்கள் தமிழர்களென எம்மவரை வாயாலேயே சொல்லவைத்து எவ்வளவு பார்த்தாயிற்று .. ஒரு மொழியை அழித்தொழிக்க நினைத்தால் முதலில் பேசும் மக்களிடம் பிரிவினையை உண்டாக்கு .. இனத்தின் கலாச்சாரத்தை அழிக்க நினைத்தால் முதலில் நூலகத்தை கொளுத்து மக்களிடமிருந்து கல்வியை பிடுங்கு இதைதான் ஆரியம் மிக சாதூர்யமாக நடந்திவந்தது .. திராவிட இயக்கம் தோன்றியதன் பின்னால் தான் மக்களிடையே கல்வியை பற்றிய விழுப்புணர்வும் நமதான உரிமை அது என்ற தெளிவும் வந்தது எங்கே நம்மிடம் உள்ளதெல்லாம் இதுவரை கட்டி காத்ததெல்லாம் நாம் மட்டுமே அனுபவித்ததெல்லாம் போய்விடுமோ என அஞ்சி மெல்ல பழைய நிலைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை படிபடியாக செய்துவருகிறது ஒவ்வொரு முறையும் வெகுண்டெழுந்து போராட வேண்டியிருக்கிறது .. நீட் தேர்விற்கு அனுமதியை ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது துரோகி மாஃபா பாண்டியராஜனை கொண்டு கையெழுத்திட்டு இன்று அதை நீக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது எதையும் நேரடியாக எதிர்க்க முடியாமல் திரைமறைவிலேயே நகர்த்தும் வேலை தெரிந்தவர்கள் ..
..
இன்றல்ல ஆரம்பம் தொட்டே எல்லாவற்றையும் தமிழர்களுக்கு எதிராகவே செய்பவர்கள் .. தமிழ்நாடு என பெயரிட வேண்டுமென கேட்டபோது
திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டவர்கள் தமிழ் நாடென்று கேட்கிறார்கள் என கு.க.பாளையம் ராஜகோபால்(ராஜாஜி) டெல்லிக்கு தகவல் அனுப்பிய போது
அன்றைக்கு நாட்டிற்குள்ளே நாடா என நாடாளுமன்றம் கேட்டபோது…அண்ணா சொன்னார்
இந்தியாவே நாடு அல்ல துணை கண்டம் .. நாடென்றால் ஒற்றை கலாச்சாரம் ஒரே பண்பாடு ஒரே இனம் மொழி கொண்டதாக இருக்கவேண்டும்
பன்முக தன்மை கொண்ட பல்வேறு இன மொழி கலைச்சாரம் கொண்டது இந்தியா அதில் தமிழர்களுக்கென ஒரு நாடு என்றார் .. எதை செய்தாலும் அதில் தமிழ்நாட்டிற்கு தமிழ்மொழிக்கு தீங்கிழைப்பதையே கொண்டிருக்கிறது இந்த பாசிச அரசு ..
..
மெல்ல திணிக்கலாமென்று எண்ணத்தில் இந்தி ஆங்கிலம் மட்டுமே என்ற சுற்றறிக்கையை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறார் திரு.ஸ்டாலின் தமிழகத்தில் எந்தவடிவில் வந்தாலும் நசுக்கபடுவீர்களென எச்சரித்து திமுக தன் கடமையாற்றியிருக்கிறது இந்தி வேண்டுமென பேசிய மாபொசியை கூட கடந்துதான் கரிபூசியிருக்கிறோம் .. எத்தன் வழிகளுண்டோ முயற்சி செய்யுங்கள் .. பேரருளாளன் கலைஞர் மறைந்தவுடன் பெரிய வெற்றிடம் என்றெல்லாம் பேசி திரிந்து யார்யாரையோ மெருகேற்றி வெளிச்சம் போட்டுகாட்டி சாந்துபூசி .. கடைசியில் இங்கு திராவிட இயக்கத்தின் வேர் ஆயிரம் அடி ஆழ சென்று விரிந்து ‘தரு’ பரந்து விரிந்து நிழல் தருகிறது என்ற உண்மையை உணர்ந்திருக்கிறார்கள் ..
..
திமுக தமிழகம் காக்கும்
..
ஆலஞ்சியா

தொடர்ந்து சறுக்கும் பாமக – திமுகவின் திட்டம் என்ன?

தொடர்ந்து சறுக்கும் பாமக – திமுகவின் திட்டம் என்ன?

தொடர்ந்து சறுக்கும் பாமக – திமுகவின் திட்டம் என்ன? பாட்டாளி மக்கள் கட்சியை தனி கவனத்துடன் குறிவைத்து அதன் செல்வாக்கை சிதைக்கிறாரோ ஸ்டாலின்? என்ற கேள்வி எழும் வகையிலேயே, சில தேர்தல் முடிவுகள் அமைகின்றன.
கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் சந்தித்த பாமக, 30 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களை வென்றது. அதுதான் பாமகவின் கடைசி வெற்றிகரமான தேர்தல் எனலாம்.

வேல்முருகனையும்
தமிழக வாழ்வுரிமை கட்சி யை சேர்ந்த வேல்முருகன்

அதன்பிறகு, திமுகவுடன் முரண்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், தன் மகன் அன்புமணி மத்திய காங்கிரஸ் அரசில் கேபினெட் அமைச்சராக இருக்கும்போதே, அதிமுக கூட்டணிதான் வெல்லும் என தவறாக கணித்து, அந்த அணியில் இணைகிறார்.
அதிமுக கூட்டணியில், 7 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை தொகுதிக்கு உடன்பாடு ஏற்படுகிறது.
அப்போது, வெறும் 96 சட்டமன்ற இடங்களை மட்டுமே பெற்றிருந்த திமுக, காங்கிரஸ் கட்சியின் 34 உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழக அரசை நடத்தி வந்தது. கம்யூனிஸ்டுகளும் திமுக கூட்டணியை விட்டு விலகிவிட்டனர். எனவே, காங்கிரஸ் ஆதரவு இல்லையெனில் திமுக அரசு கவிழ்ந்துவிடும் என்ற இக்கட்டான நிலை.
அந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வென்றுவிட்டால், ராமதாஸ், காங்கிரசை அதிமுக பக்கம் கொண்டுசென்று விடுவார் என்ற செய்திகள் வேகமாகப் பரவின. எனவே, திமுக முகாமில் உச்சகட்ட டென்ஷன். நம் ஆதரவில் மகனை ராஜ்யசபா உறுப்பினராக்கி, அமைச்சராகவும் ஆக்கிவிட்டு, தற்போது நம் அரசையே காவுவாங்கப் பார்க்கிறாரா ராமதாஸ்? என்ற கோபம் வெடிக்கிறது திமுக முகாமில்.
இந்த விஷயத்தில் ஸ்டாலின் மிகவும் அப்செட் என்ற தகவல்களும் கசிகின்றன. எனவே, அதிமுக வெல்கிறதோ? இல்லையோ? பாமக போட்டியிடக்கூடிய சிதம்பரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், தருமபுரி, திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளிலும் அக்கட்சியை எப்படியும் வீழ்த்தியே ஆக வேண்டுமென தீர்மானிக்கிறது திமுக.
பாமக எதிர்முகாமிற்கு சென்றதால், தம் அணியில் விடுதலை சிறுத்தைகளை வைத்துக்கொண்டது திமுக. சிதம்பரத்தில் பாமகவை எதிர்த்து திருமாவளவனை அவர் கேட்டபடியே தனிச்சின்னத்தில் களமிறக்கியது திமுக.
காங்கிரஸ் கோட்டையான புதுச்சேரியில் போட்டியிட்ட பாமகவை எதிர்த்து காங்கிரசின் நாராயணசாமி நின்றார். இவைதவிர, தமிழகத்தில் உள்ள இதர தொகுதிகளான திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி ஆகிய ஐந்திலும் பாமகவோடு மோதியது திமுக.
சொல்லிவைத்தாற்போல், அனைத்திலும் பாமகவை வீழ்த்தியது திமுக. அத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக(ஈரோடு), சிபிஎம்(கோவை) மற்றும் சிபிஐ(தென்காசி) போன்ற கட்சிகள் தலா 1 இடத்திலேனும் வெற்றிபெற, லேட்டஸ்டாக கூட்டணிக்குள் வந்து மொத்தமாக 7 தொகுதிகளை வாங்கிக்கொண்டு சென்ற பாமகவின் நிலைமை பரிதாபமானது.
திமுக கூட்டணி மொத்தம் 28 இடங்களில் வென்றதன் மூலமாக, திமுக ஆட்சியும் தப்பியது. பாமகவின் செல்வாக்கும் நொறுக்கப்பட்டது.
பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலில், வேறுவழியின்றி திமுக – பாமக கட்சிகள் இணைந்து போட்டியிட்டாலும், அக்கூட்டணி தேறவில்லை. இதற்கிடையில், 2014 நாடாளுமன்ற தேர்தலில், மூன்றாவது அணியில் இணைந்து போட்டியிட்ட பாமக, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் நிலவிய சாதியப் பூசல்களைப் பயன்படுத்தி, அன்புமணியை மட்டும் தனிப்பட்ட அக்கறை எடுத்து வெற்றிபெற வைத்தது.
அதன்பிறகு, 2016 சட்டமன்ற தேர்தலில்தான் பிரச்சினை பெரிதானது. மருத்துவப் பட்டப்படிப்பு முடித்துள்ள அன்புமணியை, தமிழகத்தின் தகுதிவாய்ந்த முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற கோஷத்துடன் சட்டமன்ற தேர்தலை தனியாக சந்தித்தது பாமக.
அப்போது முதலமைச்சர் போட்டியிலேயே இல்லாத ஸ்டாலினை தேவையின்றி வம்புக்கும் இழுத்தது பாமக. அதை ஸ்டாலின் எப்போதும் மறக்கவேயில்லை என்றே சொல்கிறார்கள் அரசியல் வட்டாரங்களில்.
ஆனால், ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், தன்னை தகுதியான முதல்வர் வேட்பாளர் என்று முன்னிறுத்தி, சாதி வாக்குகளை நம்பி பெண்ணாகரத்தில் போட்டியிட்ட அன்புமணி, அத்தொகுதியில் ஸ்டாலினின் வேட்பாளரான இன்பசேகரனிடமே தோற்கிறார். அந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் போட்டியிட்ட பாமக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 0.
அப்போதிருந்தே திமுக மற்றும் பாமக இடையிலான பனிப்போர் உச்சத்தில் இருந்துகொண்டே இருந்தது எனலாம். தற்போது நடந்துமுடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாமகவை தனது கூட்டணியில் இழுக்க திமுக முயன்றதாகவும், ஆனால் அதையும் மீறி அதிமுக அணியில் பாமக இணைந்ததால், திமுக தலைவர் ஸ்டாலின் உச்சகட்ட கோபத்தில் ராமதாசை வார்த்தைகளால் விளாசினார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், உண்மையில் திமுக நினைத்திருந்தால் பாமகவை தனது கூட்டணியில் இணைத்திருக்கலாம். ஆனால், திமுக விரும்பவில்லை என்பதே உண்மை. ஏனெனில், பாமக இல்லாமலேயே 2009 நாடாளுமன்ற மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் வடமாவட்டங்களில் நல்ல வெற்றியை பெற்றது திமுக கூட்டணி.
மேலும், அதிமுக அரசையும், மோடி அரசையும் கடைசிவரையில் மிக மோசமாக விமர்சித்துவிட்டு, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியே வைக்க மாட்டோம் என சொல்லிக்கொண்டு, மீண்டும் கூட்டணியில் இணைந்துகொண்ட பாமகவை, வாக்களர்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே ஸ்டாலின் அவ்வாறு வசைபாடினார்.
தேய்ந்து கொண்டிருக்கும் பாமகவை தேவையில்லாமல் கூட்டணியில் சேர்த்து, 2021 சட்டமன்ற தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியாக மாறக்கூடிய வாய்ப்புள்ள அக்கட்சியை, சில இடங்களில் வெற்றிபெற வைக்க ஸ்டாலின் விரும்பவில்லை என்பதே உண்மை.
திமுகவின் பாரம்பரிய வன்னியர் வாக்கு வங்கியில் ஓட்டைப்போட்டு உருவானதுதான் பாமக என்பதை பலரும் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். திமுக போட்டியிடாத 1952 தேர்தலில், வாக்குறுதிகளின் அடிப்படையில், வன்னியர் சமூக தலைவர்களான மாணிக்கவேல் நாயக்கர் மற்றும் ராமசாமி படையாட்சி ஆகியோரின் கட்சிகளுக்கு ஆதரவளித்து, அக்கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றன.
பின்னர், மற்றொரு வன்னியர் தலைவரான ஏ.கோவிந்தசாமியின் மூலமாக தனக்கான உதய சூரியன் சின்னத்தையும் திமுக பெற்றது. எனவே, தொடக்கம் முதலே திமுகவிற்கும் வன்னியர் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க பிணைப்பு உண்டு.
திமுக தனது தொடக்க காலங்களில், டெல்டா மற்றும் வடமாவட்டங்களின் துணையுடன்தான் வளர்ந்து வந்தது. 1962 சட்டமன்ற தேர்தலில், காமராஜரின் அரசியல் வியூகத்தையும் மீறி 50 சட்டமன்ற இடங்களில் திமுக வெல்வதற்கு, வடமாவட்டங்களின் உதவியே பெரிய காரணம்.
ஆனால், கடந்த 1989ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி தானாக முன்வந்து அளித்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையும் மீறி, பாமக ஒரு செல்வாக்கான கட்சியாக வடமாவட்டங்களில் வளர்ந்து, திமுகவின் பாரம்பரிய வன்னியர் வாக்குகளில் பெரிய ஓட்டையைப் போட்டது.
எனவே, பாமகவை ஸ்டாலின் தனியாக குறிவைப்பதென்பது, திமுகவின் பாரம்பரிய வன்னியர் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சேதாரத்தை சரிசெய்வதாகவும் இருக்கலாம். பாமகவின் சிறிய எழுச்சியைக்கூட திமுகவிற்கு தீங்கான ஒன்றாக ஸ்டாலின் கருதலாம்.
அந்த அடிப்படையில்தான், இந்த மக்களவைத் தேர்தலில் பாமகவை குறிவைத்து, அக்கட்சி போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிட்டது திமுக. குறிப்பாக, சாதிய வாக்குகளை நம்பி நின்ற அன்புமணியை வீழ்த்த, தனி வியூகத்துடனேயே களமிறங்கியது திமுக.
தேவையான அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனையும் பயன்படுத்திக் கொண்டது. சமீபத்தில் மறைந்த காடுவெட்டி குருவின் உறவினர் மற்றும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி போன்றோர் வேல்முருகனின் கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்தது திமுகவுக்கு நன்றாகவே ஒர்க்அவுட் ஆனது.
அன்புமணியை 70000+ வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வீழ்த்தியது நிச்சயம் ஒரு பெரிய வெற்றிதான். சிதம்பம் தொகுதியில் திருமாவளவன் தட்டுதடுமாறி வெறும் 3000+ வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க, தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வென்றது கவனிக்கத்தக்கது. கடந்த 2014 தேர்தலில் அன்புமணி வென்றதும் கிட்டத்தட்ட இதே வாக்குகள் வித்தியாசத்தில்தான்.
கடந்த 2009 தேர்தலில் சறுக்கத் தொடங்கிய ராமதாஸ், அடுத்த பத்தாண்டுகளில் நடைபெற்ற 4 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக சறுக்குகிறார்.
எப்படியேனும் 5% வாக்குகளை தக்கவைத்துக் கொண்டிருக்கும் பாமகவை, அரசியல்ரீதியாக திட்டமிட்டு காலிசெய்வதன் மூலமாக, அந்த வாக்குகளை திமுகவின் பக்கமாக மடைமாற்ற ஸ்டாலின் முயல்கிறார் என்றே கருதலாம்.
– மதுரை மாயாண்டி

பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

புதுடில்லி பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வது எப்படி? பிரதமரின் நேரடி பணியாளர்களையும், பிரதமருக்கு பல்வேறு நிலைகளில் உதவிபுரியும் பணியாளர்களையும் உள்ளடக்கியது பிரதமர் அலுவலகம்.
இதன் நிர்வாக தலைவராக பிரதமரின் முதன்மை செயலர் இருப்பார். தற்போது இந்த பதவியில் நிரிபேந்திர மிஸ்ரா உள்ளார்.
இந்நிலையில், அவசர காலங்களில் உதவிக்கு பிரதமர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான முகவரிகள், தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் அலுவலக முகவரி 
152, தெற்கு பிளாக், ரைசினா ஹில், புதுடில்லி – 110011
.போன்:+91-11-23012312,
23018939
பேக்ஸ்: +91-11-23016857
பிரதமரின் வீட்டு முகவரி:
7 ரேஸ்கோர்ஸ் ரோடு, புதுடில்லி-110001 போன்:+91-11-23911156,
23016060
பேக்ஸ்: + 91-11-23018939
பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள முகவரி
அறை எண்- 10, பார்லிமென்ட் வளாகம், புதுடில்லி-110001
போன்:+91-11-23017660
பேக்ஸ்: +91-11-23017449
பிரதமர் அலுவலக இணை அமைச்சர்: ஜிதேந்திரா சிங்மொபைல்: +91 – 11-23010191, +91-11-23013719பேக்ஸ்: +91-11-23017931
அஜித் தோவல்தேசிய பாதுகாப்பு ஆலோசகர்போன்:+91-11-23019227
நிரிபேந்திர மிஸ்ரா,பிரதமரின் முதன்மை செயலர்போன்:+ 91-11-23013040
பாஸ்கர் குல்பேபிரதமரின் செயலர், போன்: +91-11-23010838
சஞ்சீவ் குமார் சிங்லாபிரதமரின் தனிச்செயலர்போன்: +91-11-23012312
ராஜீவ் தொப்னோ பிரதமரின் தனிச்செயலர்போன்: +91-11-23012312
பிரதமர் அலுவலகத்தின் தகவல் மற்றும் தொலைநுட்பத்திற்கான சிறப்பு பணியில் உள்ள அதிகாரி ஹிரேன் ஜோஷி . போன்:+91-11-23014208
Thanks Tamilselvi

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left