Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு

ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு

ஜெய்பீம் உவைஸி அவர்களால் பாராளுமன்றத்தில் முழங்கபட்ட இந்த மந்திரம், இனி பாரதம் முழுதும் ஒலிக்கும் சூழல் உருவாகி உள்ளது
ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு  புனே நகருக்கு அருகே உள்ள ‘பீமா’ என்ற நதிக் கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் ! 1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்

தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது

அப்போது,இந்துமத வேதப்பண்பாடுகளும்,மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன
தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும் அதனால்
அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும். தலித்கள் கல்வி கற்கக்கூடடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது
இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும்,பிற்படுத்தப்பட்ட மக்களும்,சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்
1817 டிசம் 31 இரவு. புனே நகருக்கு அருகே கோரிகான் என்றஊரில் உள்ள ‘பீமா’ என்ற நதிக்கரைதான் போர்க்களம்.
2-ஆம் பாஜிராவ் என்ற பார்ப்பன மன்னனின் தளபதியான, ‘கோகலே’ தலைமையில் 28000 பார்ப்பனப்படைவீரர்கள் ஒருபுறம்.500 மகர் சமுதாய வீரர்களும்,100 பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமியச் சமுதாய வீரர்களும் இணைந்த படை மறுபுறம். போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்பனப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்
பார்ப்பனப் படைத்தலைவன் கோகலே களத்திலேயே படுகொலை ஆனான்.ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களும், அவர்களின் ஆதரவுப் படைகளும் சிதறின பாஜிராவ் கைதானான் பார்ப்பன பேஷ்வாக்களின் மராட்டியப் பேரரசுக்கு இரத்தத்தால் முடிவுரை எழுதியது மகர் ரெஜிமண்ட்.
வெற்றியின் நினைவாக, சாதி ஒழிப்புப் போராளிகள் விதைக்கப்பட்ட ‘பீமா’ நதிக்கரையில் ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது  1927 ஜனவரி 1 ல் தோழர் அம்பேத்கர் இந்த நினைவிடத்திற்குச் சென்றார் அன்றுதான் பீமா நதிக்கரை வெற்றியின் நினைவாக ஜெய் பீம் எனும் வெற்றி முழக்கம் வெடித்தது.
இந்துமத வேத,சாஸ்திர,சம்பிரதாயங்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும்,தலித்துகளும்,பிற்படுத்தப் பட்டவர்களும்,சிறுபான்மையினரும் இணைந்துநடத்திய ஆயுதப் போராட்டத்தின் 200வது வீரவணக்கநாள் 1.1.2018.
– நன்றி தோழர் Aasif
Find Property in Chennai 

எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ ஈரான் தான் தாக்குத‌லுக்கு கார‌ண‌ம்

 எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ ஈரான் தான் தாக்குத‌லுக்கு கார‌ண‌ம்

அண்மைக் கால‌த்தில் ஈரானுக்கும் ஒமானுக்கும் இடையிலான‌ கட‌ற்பிராந்திய‌த்தில் நான்கு எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ ஈரான் தான் தாக்குத‌லுக்கு கார‌ண‌ம் என்று அமெரிக்காவும், ச‌வூதி அரேபியாவும் தெரிவிக்கின்ற‌ன‌
ஆனால் ஐரோப்பிய‌ ஒன்றிய‌ம் கூட‌ அதை நம்ப‌த் த‌யாராக‌ இல்லை. சுயாதீன‌மான‌ விசார‌ணை நட‌த்த‌க் கோருகின்ற‌து
அதே நேர‌ம் சில‌ விசித்திர‌மான‌ போக்குகளை அவ‌தானிக்க‌க் கூடிய‌தாக‌ உள்ள‌து ஈரானில் ஜ‌ப்பானிய‌ தூதுவ‌ர் பேச்சுவார்த்தை நட‌த்திக் கொண்டிருந்த‌ நேர‌ம் ஜ‌ப்பானிய‌  எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌து
இப்படியான நேரத்தில் ஈரான் தாக்குதல் நடத்த துணியுமா என்பது கேள்விக்குறி

தாக்குத‌லுக்குள்ளான‌ எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ளில் வேலை செய்த‌ யாரும் கொல்ல‌ப் ப‌ட‌வோ, காய‌ம‌டைய‌வோ இல்லை  அவ‌ர்க‌ள் உரிய‌ நேர‌த்தில் பாதுகாப்பாக‌ வெளியேற்ற‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்
அது ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌க் க‌ப்ப‌லும் வெடித்து சித‌றிய‌தாக‌வோ அல்ல‌து எண்ணைக் க‌சிவு ஏற்ப‌ட்ட‌தாக‌வோ த‌க‌வ‌ல் இல்லை

அது ஒரு பொற்கால‌ம்:

அது ஒரு பொற்கால‌ம்  ஐம்ப‌துக‌ளில் இல‌ங்கையில் வெளிவ‌ந்த‌ ப‌த்திரிகை ஒன்றில் முஸ்லிம் பெண்க‌ளும் உழைக்கும் வ‌ர்க்க‌ப் பிர‌திநிதிக‌ளாக‌ ம‌திக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்
த‌ற்கால‌ ஊட‌க‌ங்க‌ளை முஸ்லிம் பெண்க‌ளை பூர்க்கா அணியும் ம‌த‌ம் காவிக‌ளாக‌ ம‌ட்டுமே சித்த‌ரிக்கின்ற‌ன‌  ம‌த‌ அடையாள‌ அரசிய‌லும், முத‌லாளித்துவ‌ வ‌ர்க்க‌ அர‌சிய‌லும் ஒன்றுட‌ன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு உழைக்கும் வர்க்க‌ ம‌க்க‌ளை பிரித்து வைப்ப‌தில் க‌ணிச‌மான‌ அள‌வு வெற்றி பெற்றுள்ள‌ன‌
Kalai Marx

உங்கள் அன்போடும்,ஆசியோடும் ஜோதிமணி பெருமிதம்

உங்கள் அன்போடும்,ஆசியோடும்  ஜோதிமணி பெருமிதம்

உங்கள் அனைவரின் அன்போடும்,ஆசியோடும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டேன் ஜோதிமணி பெருமிதம்
இந்த நெகிழ்ச்சி யான தருணத்தில் கரூர் பாராளுமன்றத் தொகுதி மக்களுக்கும்,திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற
முற்போக்குக் கூட்டணியின் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்!

ஜோதிமணி பெருமிதம்

உங்கள்,அன்பையும்,நம்பிக்கையையும் எப்பொழுதும் காப்பாற்றுவேன். கரூர் பாராளுமன்றத் தொகுதியின்,தமிழகத்தின்போர்க்குரலாக ஒலிப்பதில் எப்பொழுதும்,எவ்வித சமரசமும் செய்துகொள்ளமாட்டேன்
மீண்டும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
ஜோதிமணி முதல் பெண் பாராள மன்ற உறுப்பினர் ஆகிறார் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது முதல் வெற்றி பதவியேற்பு

உங்கள் அனைவரின் அன்போடும்,ஆசியோடும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டேன். இந்த நெகிழ்ச்சி யான தருணத்தில் கரூர் பாராளுமன்றத் தொகுதி மக்களுக்கும்,திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்! உங்கள்,அன்பையும்,நம்பிக்கையையும் எப்பொழுதும் காப்பாற்றுவேன். கரூர் பாராளுமன்றத் தொகுதியின்,தமிழகத்தின்போர்க்குரலாக ஒலிப்பதில் எப்பொழுதும்,எவ்வித சமரசமும் செய்துகொள்ளமாட்டேன். மீண்டும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Posted by Jothimani Sennimalai on Tuesday, 18 June 2019

சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார்!

சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார்

‘சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார்’ என்கிற செய்திதான், அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க ஆகிய கட்சிகளில் சிலருக்கு மகிழ்ச்சியையும் பலருக்கு பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. இருக்காதா பின்னே
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடந்த அரசியல் காட்சிகள், இதுவரை ஹாலிவுட் படங்களிலுமே நாம் காணாதவை. சரி, அ.தி.மு.க-வின் தற்போதைய தலைமை, அடுத்து என்ன திட்டமிட்டிருக்கிறது? 
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
தொடர்ந்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவிப்பதற் குள், ஜெயலலிதா மரணம் அடைந்தார். பின்னர், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதலமைச்சர் ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்
அதனால் கோட்டைக்குச் செல்லும் கனவிலிருந்த சசிகலா, பெங்களூரு சிறைக்குச் சென்றார். இதற்கிடையே முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போய்… எடப்பாடி பதவியேற்றது எல்லாம் தனிக்கதை. மறுபக்கம் தினகரன், கட்சியைக் கைப்பற்ற முயற்சிசெய்து தோல்வியடைந்தார். இதன் தொடர்ச்சியாக அ.ம.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகச் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் டெபாசிட் இழந்தது இக்கட்சி

அ.தி.மு.க தன் கைக்கு வந்துவிடும்’ என்று சசிகலா உறுதியாக இருந்ததால்


‘எப்படியும் அ.தி.மு.க தன் கைக்கு வந்துவிடும்’ என்று சசிகலா உறுதியாக இருந்ததால், அ.ம.மு.க-வில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறார் கள். அத்துடன், ‘அ.தி.மு.க மீதான உரிமை தொடர்பான வழக்கும் என் பெயரிலேயே நடக்கட்டும்’ என்றும் தினகரனிடம் சசிகலா சொல்லியிருப்பதாகத் தெரிகிறது
இந்த நிலையில்தான், தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும் படுதோல்வியடைந்திருப்பதால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சிலர் செய்துவரும் விமர்சனங்களால், ‘ஆட்சி கை நழுவி விடுமோ’ என்ற பயத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இதனால், ‘சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் மட்டுமே ஆட்சியைத் தக்கவைக்க முடியும்’ என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசியபோது, “எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து பத்து நாள்களுக்கு முன்பே சசிகலாவுக்குத் தூது விடப்பட்டது
உச்ச அதிகாரத்திலிருப்பவரின் மனைவியே, அடுக்கு டிபன் கேரியரில் சசிகலாவுக்குப் பிடித்த உணவுகளுடன் சிறைக்குள் சென்றார். அவர் சில விஷயங்களை, சசிகலா தரப்புக்குச் சாதகமாகச் சொல்லியிருக்கிறார்
தொடர்ந்து சசிகலா தரப்பில், ‘சிறையிலிருந்து வெளியே வருவதற்கு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஒத்துழைத்தால், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர உதவி செய்யப்படும்’ என்பது உட்பட சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு எடப்பாடி தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது
அத்துடன், இந்த வழக்குக்குக் காரணமான முக்கிய வி.வி.ஐ.பி ஒருவரே, ‘சசிகலாவின் விடுதலைக்கு ஆட்சேபனை இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார். அதனால், சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன” என்றார்கள்.

சசிகலாவுக்கு நெருக்கமான வர்கள் சிலரிடம் பேசினோம். “கர்நாடக சிறைத்துறை சமீபத்தில் அந்த மாநில அரசுக்கு அளித்த அறிக்கையில், ‘சசிகலாவின் நன்னடத்தை சிறப்பாக இருப்பதால், முன்கூட்டியே விடுதலை செய்யலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது
சசிகலா, சிறையிலிருந்தபடி கன்னட மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருப் பதையும் அறிக்கையில் குறிப்பிட் டிருக்கிறது சிறைத்துறை இந்த அறிக்கை, சசிகலாவுக்கு மிகவும் சாதகமாக அமையும்  ‘நன்னடத்தை அடிப்படையில் என்னை விடுதலை செய்ய வேண்டும்’ என்று சசிகலா சார்பிலும் கர்நாடக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளது

சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார் நடவடிக்கை எடுக்கப்படும்

தவிர, கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பத்தினர், சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்  அதனால், சசிகலாவின் கோரிக்கைமீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். இதுதொடர்பான ஃபைல், கர்நாடக கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்
அதனால் நான்கு மாதங்களுக்குள் சசிகலா விடுதலையாவார் என்று உறுதியாக நம்புகிறோம்” என்கிறார்கள்.
“சசிகலாவின் விடுதலைக்கு சட்டரீதியாக சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா?” என மூத்த வழக்கறிஞர் மோகன கிருஷ்ணனிடம் கேட்டபோது, “சசிகலா அல்ல யாராக இருந்தாலும் சிறைத்துறை நன்னடத்தை சான்றிதழ் அளித்தால், அதைக் காரண மாகக்கொண்டு சம்பந்தப் பட்ட நபரை ஆளுநர் விடுதலை செய்ய சட்டத்தில் இடம் உண்டு
ஆனால், ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றவர்களை கவர்னர் விடுவிக்க முடியாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது

எடப்பாடி தரப்பு செய்த துரோகத்தை அவ்வளவு சீக்கிரம் சசிகலா மறந்திருக்க வாய்ப்பில்லை!

அதற்குக் காரணம், வட மாநிலங்களில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் கவர்னர்களின் ஆசியுடன் பாதியிலேயே விடுதலைபெற்ற சம்பவங்கள் நடைபெற்றிருந்ததுதான். இதற்குப் பிறகு உச்ச நீதிமன்றமே இவ்விஷயத்தில் தலையிட்டு, சில விதிகளைக் கொண்டுவந்தது
சசிகலா விவகாரத்தைப் பொறுத்தவரை அவர் ஏற்கெனவே வேறு சில வழக்குகளில் சிறையில் இருந்த காலகட்டத்தையும் கர்நாடக சிறைத்துறை கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கலாம்
அப்படி எடுத்துக்கொண்டால் மட்டுமே, ஒருவேளை அவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்றார்.
சசிகலாவுக்கும் தினகரனுக்கும் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டிருப்பதை உணர்ந்துதான், சசிகலாவுக்குத் தூது விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்
அதை நிரூபிக்கும் வகையில், சசிகலாவின் விடுதலை தொடர்பான பணிகளிலும் தினகரன் தலையிடாமல் இருக்கிறார்
அரசியல் சதுரங்கத்தில் கணக்குகள் அனைத்தும் சரியாக இருந்து ஒருவேளை சசிகலா விடுதலையானால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சியை விட்டுக் கொடுப்பாரா
இல்லை தட்டிப் பறிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்ஏனெனில், எடப்பாடி தரப்பு செய்த துரோகத்தை அவ்வளவு சீக்கிரம் சசிகலா மறந்திருக்க வாய்ப்பில்லை!

  • அ.சையது அபுதாஹிர்


‘‘முன்விடுதலை சாத்தியமே இல்லை!’’ – டி.ஐ.ஜி ரூபா
சசிகலா விடுதலை குறித்து, பெங்களூரு முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபாவிடம் கேட்டோம். ‘‘கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி, சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலகட்டத்தில் வேறு எந்தத் தவறும் செய்யாமல் நன்னடத்தையுடன் நடந்துகொண்டால், அதன் அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உண்டு
இந்தச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி, சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகப் பலரும் பேசிவருகிறார்கள்  இதுகுறித்து தொடர்ந்து என்னிடமும் கேள்விகள் கேட்டு வருகிறார்கள். நான் கேள்விப்பட்டவரையில், சசிகலா சிறையில் நன்னடத்தையோடுதான் நடந்துகொண்டிருக்கிறார்
அதற்காகத் தண்டனையைக் குறைப்பார்கள் என்று சொல்லமுடியாது. சசிகலா வழக்கைப் பொறுத்தவரை, நன்னடத்தைச் சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படுவது சிரமம்தான்
இந்த வழக்கு, மற்றப் பொதுவான விதிமுறைகளுக்குள் வராது ஆதலால், தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே, அவரை விடுவிப்பது என்ற கேள்வியே எழாது  எனவே, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை!’’ என்றார் உறுதியாக.
– இ.லோகேஷ்வரி

வெயில் தாக்கம் தமிழிசை உளறல் தூக்கலாக கேட்கிறது

வெயில் தாக்கம்  தமிழிசை உளறல்  தூக்கலாக கேட்கிறது

வெயில் தாக்கம்  தமிழிசை உளறல் கொஞ்சம் தூக்கலாக கேட்கிறது
37 பேர் பதவி பிராமணம் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சத்தம் அதிகமாய் கேட்கிறது வயிற்றெரிச்சல்
தண்ணீர் பஞ்சம் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லையாம் .. அரசியலில் இருக்கவே அருகதையே இல்லாத கலைஞரின் தயவில் படித்து கரையேறியவர் கதைக்கிறார் வீராணம் திட்டத்தை நடப்பில் ஆக்கியிருந்தால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்திருக்குமாம் கலைஞரின் கனவை நசுக்கியதன் விளைவிது
அன்றைக்கு பயனில்லாத திட்டமென்றவர்கள் இன்று பின்பாட்டு பாடுகிறார்கள் ..
என்னதான் முந்தைய அரசு செயல்படவே இல்லையென்றாலும் அதன் மீதே குறைச்சொல்வதை முதலில் விடவேண்டும்
கலைஞர் ஆட்சியில் ஏரிகள் தூர்வாரபட்டன நீர் சேகரிப்பிற்கு அதிக அக்கறை செலுத்தபட்டது ஆட்சிவிட்டு வந்து எட்டாண்டு ஆகிறது இன்னமும் இவர்கள் செயல்படவில்லை என்பதைதான் இவர்கள் பேச்சு சொல்கிறது
ஒன்றரை ஆண்டில் முழு அரசு இயந்திரத்தையுமே மாற்றி செயல்படவைத்திட முடியும் நூறுநாட்கள் தாருங்கள் அழுகிப்போன ஈரலை செப்பனிடுகிறேன் என சொல்லி செயல்படுத்தி காட்டியவர் கலைஞர்

தமிழிசை உளறல் இதுதான் உங்கள் நிலமை

ஆனால் இன்றும் ஆட்சி செய்பவரை விட  புறமிருந்து இயக்குகிற கோழைகள் அதிகம் கதைக்கிறார்கள் அதிமுகவை நம்பிதான் நின்றோம் அவர்கள் எமக்கு வேலை செய்யவில்லை தோற்கடித்துவிட்டார்கள் அதிமுக ஆதரவின்றி தேர்தலில் நின்றிருந்திருந்தால் கட்டிவச்ச காசு கூட திரும்ப கிடைத்திருக்காது
இதுதான் உங்கள் நிலமை தன் தகுதி அறிந்து பேசவேண்டும் வார்டு கவுன்சிலருக்கு நின்றால் கூட ஓட ஓட விரட்டுவார்கள் தமிழ் மக்கள்
இந்த நிலையில் அணுகழிவால் ஆபத்தில்லை என சர்டிபிகேட் வேறு தருகிறார் தமிழிசை கர்நாடக எடியூரப்பா இங்கே கொட்ட கூடாதென தான் சார்ந்த மாநில நலனுக்காக பேசுகிறார் ஆனால் தமிழ் மக்களுக்கெதிராக பேசுகிற ஞானசூன்யமாய் குமரியின் மகள் வெட்கபடவேண்டும்
தகுதியில்லாத தரங்கெட்ட செயலை செய்கிறார்
அமைச்சர் வேலுமணி  தண்ணீர் பஞ்சமெல்லாம் இல்லை வீண் வதந்தி என்கிறார் ஒருவேளை அவர் வீட்டில் அமைச்சர் என்ற அதிகார வரம்பில் தண்ணீர் மிகுதியாய் இருப்பதால் மக்களின் கஷ்டம் புரியவில்லை
குளித்து சிலநாட்கள் ஆகிறது .. தண்ணீர் குடம் 10/ 20 என விற்கிறது சாமானியர்கள் வாடகை குடித்தனங்கள் உணவு விடுதிகள் தண்ணீர் பறறாக்குறை அமைச்சருக்கு தெரியவாய்ப்பில்லை .. அமைச்சராக இருக்க தகுதியற்றவர்
தகுதி இல்லாதவர்களை அமைச்சராக்கியது ஜெயலலிதா செய்த தவறு .. அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களெல்லாம் அமைச்சர்களாக்கியது தான் .. லாயக்கற்றவர்களை நாம் கொண்டாடியதுதான் இதற்கெல்லாம் காரணம் சினிமாகாரனை ரசிப்பதோடு நிறுத்தியிருந்தால் இத்தனை இன்னல்கள் வந்திருக்காது
அதிமுககாரன் திமுகவை குறை கூறுவதில் கூட ஏற்றுக்கொள்ளலாம் .. ஐந்தாண்டு நலத்திட்டங்களை திமுக செயல்படுத்திவிடும் அதைவைத்தே அதிமுக ஐந்தாண்டை கடத்திவிடும்
ஆனால் பாஜகவை சேர்ந்த தமிழிசையும் பொன்னரும் பேசுவதுதான் வேடிக்கை உங்களுக்கு என்ன சம்பந்தம் என்ன தகுதியிருக்கிறது தமிழகத்தில் எக்காலத்திலும் தனித்து நின்று வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியாத சாரணர் தேர்தலில் கூட ஓடவிட்டு அடித்துதுவைக்கிற நிலைதான்
மைக் கிடைக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் குறைச்சொல்லலாம் எதை வேண்டுமானாலும் பேசலாம் உளறலாம் என்பது .. திராவிடம் தந்த கருத்துரிமை தான் காரணம்
பிற மாநிலமாக இருந்தால் வாயிலேயே வெட்டுவிழும்
இங்குதான் தாரதரமின்றி விமர்சிக்கமுடியும் யோக்கியதை இல்லாதவன் கூட இங்கே கட்டவழித்துவிட்டவனை போல பேசி திரியமுடியும்
எதற்கும் ஒரு அளவுண்டு.. இவர்கள் அரசியல் தெளிவற்றவர்கள் ஆம்.. அருகதையற்றவர்களோடு கதைப்பது கூட அறிவுடை செயல் அல்ல.. நமக்குதான் இழுக்கு
தகுதியற்றவர்களின் அரசியலால் தரங்கெட்டு போய் கிடக்கிறது தமிழகம்
தமிழகத்திலிருந்து இந்த பாசிசத்தின் அடிமைகளும் இன துரோகிகளும் விரட்டபடவேண்டும்,.. திராவிடத்தின் அடலேறுகள் அதை செய்து முடிக்கும் ..
திராவிடமே இந்த மண்ணில் நிலைக்கும்
..
ஆலஞ்சியார்

தண்ணீர் கொடுக்க விடாமல் தடுத்த அ தி மு க முன்னால் கவுன்சிலர்

தண்ணீர் கொடுக்க விடாமல் தடுத்த அ தி மு க முன்னால் கவுன்சிலர்

நாம் தமிழர் கட்சியினரை பொதுமக்களுக்கு இலவச தண்ணீர் கொடுக்க விடாமல் தடுத்த அ தி மு க முன்னால் கவுன்சிலர்,
நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க பொதுமக்களுக்கு இலவச தண்ணீர் கொடுத்து கொண்டிருந்த பொழுது அங்கே வந்த ஆ தி மு க முன்னால் கவுன்சிலர் தண்ணீர் கொடுக்க கூடாது உடனே வண்டிய எடு என்று நாம் தமிழர் கட்சியினரை தடுத்தார்

தண்ணீர் கொடுக்க ஏன் சார் தடுக்கிறீர்கள்

அதனால் அங்கே இருந்த பொதுமக்கள் ஏன் சார் தடுக்கிறீர்கள் தண்ணீ நீங்களும் தரவில்லை தருபவரையும் தடுக்கின்றீர்கள் என்று கேட்டனர்
அதற்க்கு தண்ணீர் வேண்டுமென்றால் என்னிடம் கேள் என்றார் அதற்க்கு பொதுமக்களில் ஒருவர் ஆம் தண்ணீர் இல்லை கொடுங்கள் இல்லையேல் கொடுப்பவரை தடுக்காதீர்கள் என்று சண்டை போட்டார் அதன் முழு வீடியோ கீழே இருக்கிறது

#சென்னை யல் பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுத்த #நாம்தமிழர்கட்சிஉறவுகளை தண்ணீர் கொடுக விடாமல் தடுத்த முன்னாள் #கவுன்சிலர் 😠😠😠
#தவிக்கும்தமிழ்நாடு

 

#தமிழ்நாட்டுவேசிஊடகங்கள்#சென்னை யில் பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுத்த #நாம்தமிழர்கட்சி உறவுகளை தண்ணீர் கொடுக்க விடாமல் தடுத்த முன்னாள் #கவுன்சிலர் 😠😠😠#தவிக்கும்தமிழ்நாடு

Posted by நாம் தமிழர் கட்சி கடவூர் ஒன்றியம் on Monday, 17 June 2019

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left