Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

பிச்சை எடுப்பவரை ததீவிரவாதி என்று பிடித்து சென்ற காவல்துறை

பிச்சை எடுப்பவரை ததீவிரவாதி என்று பிடித்து சென்ற காவல்துறை

கடந்தமேமாதம் 11ஆம் தேதி அன்று பெங்களூரில் உள்ள ஆர்டி நகரில் உள்ள பள்ளிவாசலில்  பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாஜித் கான் என்கின்ற 38 வயது நபரை கைது செய்தது காவல்துறை பெங்களூருவில் மிகப்பெரிய தாக்குதல் சாஜித் கான் என்பவரால் நடத்தப்படும் என்கின்ற கோணத்தில் விசாரணை செய்தது
இது ஒருபுறமிருக்க பெங்களூருவில் உள்ள செய்தி மற்றும் காணொளி ஊடகங்கள் மேமாதம் 6 ஆம் தேதி மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து ஒரு செய்தியை வெளியிட்டது தீவிரவாதி ஒருவர் பெங்களூருவில் ஊடுருவி உள்ளார் என்றும் ஒரு கன்னட தொலைக்காட்சி செய்தி வெளியிட மற்றொரு கன்னட தொலைக்காட்சியோ
பெங்களூருவில் உள்ள கெம்பகௌடா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே ஒரு முஸ்லின் வரும்பொழுது மெட்டல் டிடெக்டர் பீப் சவுண்ட் ஒளியில் வெளியிட்டது என்றும் அவருக்குப் பின்னால் வரும் நபர் அவருடைய உதவியாளர் என்றும்
இந்த காணொளி நிகழ்வுகள் காட்டி பெங்களூருவிற்கு மிகப் பெரிய ஆபத்து வந்து விட்டதாகவும் செய்திகளை வெளியிட்டது
இவர்கள் இருவரும் முஸ்லீம் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றும் அடைமொழியிட்டு செய்திகளை வெளியிட்டது
அதுமட்டுமின்றி ரயில் நிலையத்தில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர் இடம் தான் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாகவும் தன்னை வெடிகுண்டோடு உள்ளே விடுமாறும் அந்த முஸ்லிம் பேரம் பேசியதாகவும் இந்த தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன
இந்த தகவல்களை கேட்டு யார் அந்த தீவிரவாதி என்று தேடி அலைந்த காவல்துறையினர் ஒரு மசூதியின் அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாஜித் கான் என்பவரை கைது செய்து
இரண்டு நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தியது அதில் தெரிந்த உண்மை இதுதான் சாஜித் கான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன் ஜூன் மாவட்டத்தை சேர்ந்தவர்
அவர் ஒரு விவசாயக் கூலி மூன்று ஆண்டுகளாக ரமலான் மாதம் வந்து விட்டால் பெங்களூருவிற்கு வந்து அங்கு உள்ள பள்ளிவாசல்களில் பிச்சை எடுத்து அதைக் கொண்டு தன்னுடைய குடும்பத்தின் உடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு மிகக் கொடிய வறுமையில் இருக்கக் கூடியவர்கள் என்றும்
தான் பிச்சை எடுத்து சேர்த்த 5 ரூபாய் நாணயங்கள் 150 ரூபாய் வரை இருக்கும் அதை ஒரு துணியில் போட்டு கட்டி ஹன் இடுப்பில் முடிந்திருந்ததாகவும் அதனால் தான் பீப் சந்தம் கேட்டது என்பதை அவரின் விளக்கிச் சொல்ல உண்மையை அறிந்து அவரை விடுவித்தது காவல்துறை
இதை விட பெரிய கொடுமை அவரின் உதவியாளர் என்று ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டவர் ரியாஸ் அகமது என்பவர் அவர் பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் நகரில் ரோட்டோர வியாபாரியாக தன்னை தீவிரவாதி என்று வரும் செய்திகளைப் பார்த்து காவல்துறையினரிடம் சென்று தன்னுடைய நிலையை அவர் விளக்கியுள்ளார்
இதையும் விசாரித்து உண்மை என்று அறிந்த காவல்துறையினர் இவரையும் அனுப்பிவிட்டார்கள்
இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சாஜித் கான் என்பவரை சில நடுநிலை செய்தியாளர்கள் சந்தித்து கேட்டபோது அவர் கண்ணீர் மல்க சொன்னது
நாங்கள் ஏழைகள் எங்களால் என்ன செய்ய முடியும் எங்களால் அழ மட்டும் முடியும் எங்களுடைய இரு கைகளில் ஏந்தி இறைவனிடம் முறையிட மட்டுமே முடியும் என்று சொல்லியுள்ளார்
மற்றொருவரான ரியாஸ் அகமது என்பவர் சொல்கிறார் என்னை தீவிரவாதி என்று செய்தி ஊடகங்கள் சொல்லியதால் இங்கே சாமானிய மக்கள் அதை உண்மை என்று நம்பி என்னை அடித்துக் கொன்று விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது என்று தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்
இவர்கள் இருவரையும் எந்தவித கூச்சமும் இன்றி எந்தவித ஆதாரமும் இன்றி தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று அலறிய ஊடகங்கள் காவல்துறையினர் இவர்கள் அப்பாவிகள் என்று சொன்ன பின்னும் அதைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிடாமல் மௌனமாக வேறு ஒரு செய்திக்கு போய்விட்டன
இதுதான் விபச்சார வேசி ஊடகங்கள் ஊடக பயங்கரவாதம் என்று நடுநிலைவாதிகள் சொல்லப்படுகிறது
இந்திய தேசத்தில் பிச்சை எடுப்பதற்கு கூட இஸ்லாமிய சமூகம் அஞ்ச வேண்டும் போல
கமல்ஹாசன் கோட்சே பற்றி சொன்னதற்காக, அவரது நாக்கை வெட்ட வேண்டும் என்றெல்லாம்
பரிவாரங்கள் கூச்சல் போடுகின்றன. ஹிந்து தீவிரவாதம் என ஒன்று இருக்க
முடியாது” என ஆவேசப் படுகிறார், பிரதமர்
மோடி.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்
கில் விசாரணையை எதிர்கொண்டு வரும்
பிரக்யா சிங், போபால் தொகுதியில் பா.ஜ.க.
வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.
இதை என்ன வெற்று சொல்வது
இஸ்லாமிய சமூகம் ?
என்று ஒரு போதும் சொல்லாதே
ஜெய்ஹிந்த்

பாராளு மன்றத்தில் கர்ஜித்த வங்கப்புலி மகுமா மெய்த்ரா

பாராளு மன்றத்தில் கர்ஜித்த வங்கப்புலி மகுமா மெய்த்ரா

இவரை தெரியுமா?  பாராளு மன்றத்தில் கர்ஜித்த வங்கப்புலி மகுமா மெய்த்ரா
திருணாமுல் காங்கிரஸ் எம்பியான மகுமா மெய்த்ரா பாராளுமன்றத்தில் மோடி அரசை பாசிச அரசு என வர்ணித்து அதற்கான 8 காரணங்களையும் பட்டியலிட்டு பாராளுமன்றத்தையே கலங்கடித்துவிட்டார்

ஜெய்ஸ்ரீராம் கூற வற்புறுத்தி கொலை செய்யப்பட்ட அன்சாரிக்காக பாராளுமன்றத்தில் முதன் முதலில் குரல் கொடுத்ததும் இவர்தான்
இந்தியா வரலாற்றில் மதவாத அரசியல் செய்யும் ஒரே ஆட்சி இதுதான் என்று சாடினார்
உங்களின் தேசியவாதமும், நாட்டுப்பற்றும் முஸ்லிம்களை கொலைசெய்வதில்தான் உள்ளதா என்று வினா எழுப்பினார்.
வாழ்த்துக்கள் சகோதரியே
Written By Media toady 

கன்னிப் பேச்சுகளில் அனைவரையும் கவர்ந்த பேச்சு

பாராளுமன்ற புது உறுப்பினர்களின் கன்னிப் பேச்சுகளில் அனைவரையும் கவர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரர் மேற்கு வங்காள மாநிலத்தின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற மஹூவா மொய்த்ரா
இவரது பேச்சில் பேரினவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ற தலைப்பில் தற்போதைய பாஜக அரசின் பேரினவாதப் போக்கை கண்டித்தது ஆளும் கட்சியினரை அரளச் செய்தது என்பதை அவர்களின் கோஷங்கள் காட்டிக் கொடுத்தன.

அவரின் பேச்சின் சில பகுதிகள் மட்டும் இங்கே.
1. இந்தியாவில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் மத்திய அமைச்சர்களாலேயே தாங்கள் படித்த பட்டங்களுக்கான சான்றிதழ்களை காட்ட முடியாத போது,
சாதாரண குடிமக்கள் இந்த நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தும் அதற்கான சான்றுகள் இல்லையென்று நாடிழந்தவர்களாக மாற்றுவது சரியா..? அதிலும் முஸ்லிம்களை மட்டும் குறி வைப்பது முறையா..?
2. நாட்டில் மதத்தின் பெயரால் கூட்டம் கூட்டமாக வந்து சிறுபான்மை மக்களை அடித்துக் கொல்வது பாஜக ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
3. ராமர் கோவிலுக்கான 2.77 ஏக்கர் நினைப்பில் ஒட்டு மொத்த 80 கோடி ஏக்கர் நிலப்பரப்பு மக்களை மறந்து விட்டீர்கள்.
4. நாட்டின் ஊடகங்கள் ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
5. ராணுவ சாகசங்களை அரசியலாக்குவது.
6. அரசும் மதமும் பின்னிப் பிணைந்துள்ளது.
7. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் பூச்சாண்டி காட்டுவது.
8. தேர்தல் கமிஷனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பது.
அமெரிக்கா வெளியிட்டுள்ள பேரினவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ற பட்டியலில் இடம் பெற்ற அனைத்தும் தற்போதைய அரசுடன் ஒத்துப் போகிறது என்று முத்தாய்ப்பாக தனது பேச்சை முடித்தார்.
Ahmed meeran
முகநூல் பக்கத்திலிருந்து….

ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார்

ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார்

நெத‌ர்லாந்தில் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திற்குள் ம‌ட்டும் அத்தியாவ‌சிய‌ பாவ‌னைப் பொருட்க‌ளின் விலைக‌ள் பல மடங்கு அதிக‌ரித்துள்ள‌ன‌ ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார்
அதே நேர‌ம் க‌ட‌ந்த‌ ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாக‌ ச‌ம்ப‌ள‌ம் அதே நிலைமையில் தான் இருக்கிற‌து. தொழிற்ச‌ங்க‌ங்க‌ளின் ப‌ல‌ வருட‌ கால‌ போராட்ட‌ம் கார‌ண‌மாக‌, அர‌சு இப்போது தான் ச‌ம்ப‌ள‌த்தை கூட்ட‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள‌து
த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள் ஊழிய‌ரின் ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார்
தொழில‌திப‌ர்க‌ளின் ச‌ங்க‌ம் இது குறித்து “அதிர்ச்சி” தெரிவித்துள்ள‌து. வேலையாட்க‌ளின் ச‌ம்ப‌ள‌த்தை கூட்டினால் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் நெத‌ர்லாந்தை விட்டு வெளியேறி, குறைவான‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்கும் வெளிநாட்டில் முத‌லிடப் பார்க்கும் என்று முத‌லாளிக‌ள் அரசை மிர‌ட்டி வ‌ருகின்ற‌ன‌ர்
Kalai Marx

7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல்

7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல்

பத்திரிக்கைச் செய்தி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் உள்ள கொந்தகை – முனியாண்டிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா (23) 7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல்
தலித் சமூகத்தைச் சேர்ந்த சித்ராவை திருப்புவனம் காவல்நிலைய போலீசார் 5 பேர் லத்திக் கம்பாலும் பூட்ஸ் காலாலும் எட்டி உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்
காயமடைந்த சித்ரா தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்
இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர் களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது
முனியாண்டிபுரம் ஊர்காவலன் கும்பாபிசேக திருவிழா தொடர்பான நாடகம் கடந்த 18.06.2019 அன்று இரவு நடைபெற்றது
இந்த ஊர்காவலன் கோவில் என்பது பட்டியல் சாதி பள்ளர் சமூகத்து மக்கள் மட்டுமே வழிபடுகிற கோவிலாகும். நள்ளிரவு அதாவது 19.06.2019 அன்று சுமார் 1.00 மணியளவில் திருப்புவனம் காவல்நிலைய போலீசார் சுமார் 5 பேர் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்
அப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 25 – 30 பேர் நியாயவிலைக் கடையின் மாடியில் நின்று கொண்டு நாடகத்தை பார்த்துள்ளனர்

திருப்புவனம் காவல்நிலைய  போலீசார் அடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்

அங்கு வந்த போலீசார் அந்த சிறுவர்களை ஆபாசமாக பேசி கீழே இறங்குங்கடா என்று மிரட்டியுள்ளனர். சிறுவர்களும் கீழே இறங்கியிருக்கின்றனர் திடீரென்று அந்த போலீசார் சிறுவர்களை பிடித்து அடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்
நாடகத்தை கீழே இருந்துதானே பார்க்கனும் ஏன் நியாயவிலைக் கடை மாடியில் நின்று பார்த்தீர்கள் என்று கேட்டுக் கொண்டே அக்குழந்தைகள் கன்னத்திலும் அறைந்துள்ளனர்
இதனை கவனித்த காளிஸ்வரன் என்கிற 28 வயது தலித் இளைஞர், ஏன் சார் குழந்தைகளை அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சாதி ரீதியாக இழிவாகப்பேசிக் கொண்டே அந்த போலீசார் காளிஸ்வரனின் கன்னத்தில் அறைந்து லத்தியைக் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்
இதனை கவனித்த கிôôமத்து மக்கள் ஓடிவந்து தடுத்துள்ளனர். காளிஸ்வரனின் மனைவியான 7 மாத கர்ப்பிணிப் பெண் சித்ரா, சார் தயவு செய்து என் வீட்டுக்காரரை அடிக்காதீர்கள் என்று போலீஸ்காரர்கள் காலில் விழ, அவர்கள் லத்திக் கம்பாலும் பூட்ஸ் காலாலும் எட்டி உதைத்து தாக்கியிருக்கின்றனர்
போலீசாரின் தாக்குதலால் மயக்கமடைந்த சித்ரா உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்
சித்ராவுக்கு நடந்த வன்கொடுமை குறித்து மருத்துவமனையில் எம்எல்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை

போலீசாரின் அத்துமீறல்

சமீபத்தில் கடந்த 15.06.2019 அன்று இரவு மதுரையில் போலீசாரின் அத்துமீறலால் விவேகானந்தகுமார் என்பவர் கொல்லப்பட்டார்
போலீசாரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டிருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றவரை போலீசார் தாக்கியிருக்கின்றனர்
போலீசாரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் வன்முறை என்பது பெரிய போராட்டம், கலவரம் போன்றவற்றில் தான் இருக்கும்
ஆனால் தற்போது சாதாரண நிகழ்வுகளில் கூட போலீசார் அத்துமீறல் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் பலமான சக்திவாய்ந்த ஆளுமை இல்லததனால் போலீசார் இப்படி தான்தோன்றி தனமாக செயல்படுகின்றனர்
இந்நிலையில் சித்ராவின் கணவர் காளிஸ்வரன் 20.06.2019 இன்று சம்பவம் குறித்து தலைமைச் செயலர் – தமிழ்நாடு, டிஜிபி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியிருக்கிறார்.

பெண் போலீசாரால் கொடூர தாக்குதல் பரிந்துரைகள்

• கர்ப்பிணி பெண் சித்ரா மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்
• வன்கொடுமையில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்
• பாதிக்கப்பட்ட சித்ராவின் குடும்பத்தினருக்கு ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
(A.கதிர்)  செயல் இயக்குன

இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற!

இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற!

இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற! வரலாறு முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாடு என அண்ணாவால் பெயரிடப்பட்ட இந்த நிலப்பரப்பு எந்தக் காலத்திலுமே இந்தியா என இப்போது வழங்கப்படுகிற நிலபரப்புடன் இணைந்து இருந்ததில்லை
பாண்டிய மன்னனின் மகன்கள் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் தங்களுக்குள் அடித்துக்கொண்டு அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கஃபூரை அழைத்து (ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் சண்டையில் இப்போது தமிழகத்தை மோடி ஆள்வதைப் போல) வந்தபோது கூட, அவர்களது கையாட்களின் ஆட்சி இங்கே மிஞ்சிப்போனால் 50 ஆண்டுகள்தான் நீடித்தது
மவுரியர் காலமானாலும், பேரரசர் அக்பர் காலம் ஆனாலும் சரி, தென்னகம் தனி ஆட்சி தான் தனி நாடு தான் அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் கூட அதிகபட்சம் கர்நாடகா வரையில்தான் அவர்களால் வர முடிந்தது
ஆங்கிலேயர் வந்தபின் தான் தென்னகம், குறிப்பாக தமிழகம் இந்தியா எனப்படுகிற நிலப்பரப்பில் இணைந்த ‘அசம்பாவிதம்’ நடந்தது
ஆக, நமக்கும் அவர்களுக்கும் இடையே மொழியில், கலாச்சாரத்தில், குறிப்பாக ‘நாகரீகத்தில்’, ‘பண்பில்’ வேற்றுமை இருப்பது ஒன்றும் தற்செயலானதல்ல. அது வரலாற்று வேற்றுமை இன வேற்றுமை! மரபணு வேற்றுமை!
மக்களவை என்பது மாநிலங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அவை. அங்கே தமிழ் எம்பிக்கள் பதவி ஏற்கும்போது “தமிழ் வாழ்க” என தங்கள் மொழியையும், “பெரியார் வாழ்க” என தங்கள் வழிகாட்டியையும் நினைவுகூர்ந்து பதவி ஏற்கிறார்கள்

தமிழ்நாடு வேறு ஏனைய பாரதம் வேறு

ஆனால் அங்கிருந்த காட்டுமிராண்டிகள் உடனே “ஜெய் ஸ்ரீராம்” என்றும், “பாரத் மாதா கீ ஜே” என்றும் கூச்சல் எழுப்புகிறார்கள் தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரி பாரதமாதா என நாம் சொன்னோமா? இல்லை. அவர்கள்தான் சொல்கிறார்கள்
நேற்று, “தமிழ்நாடு வேறு ஏனைய பாரதம் வேறு,” என உலகுக்கே காட்டிக்கொடுத்திருக்கிறார்கள் இந்த வட இந்தியர்கள்! ஆனால் ‘Anti Indian‘ பட்டமோ நமக்கு!
காலம்காலமாக இந்தியாவின் எதிரி பாகிஸ்தான் என சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் சராசரி இந்தியர்கள். ஆனால் சயீத் அன்வர் எனும் பாகிஸ்தானிய பேட்ஸ்மேன் சென்னையில் 194 அடித்து உலக சாதனை புரிந்தபோது எழுந்து நின்று கைதட்டிய சென்னை மக்களையும், அவர்களின் பண்பையும் இந்நேரத்தில் நான் நினைவுகூர்கிறேன்
பாகிஸ்தான் மீதே பண்பு பாராட்டிய தமிழகம் எங்கே? சொந்த நாட்டின் ஒரு மாநில மக்களின் மீதும், அவர்களின் எம்பிக்கள் மீதும், மொழியின் மீதும் பகைமை பாராட்டும் வடநாடு எங்கே!
ஆங்கிலேயர்கள் நமக்கு எவ்வளவோ தீமைகளையும், நன்மைகளையும் ஒருசேரச் செய்திருக்கிறார்கள்
நம்மைக் கொள்ளை அடித்த அதேவேளையில் நமக்கு கல்விக் கதவுகளை திறந்துவிட்டவர்கள் அவர்கள்தான்
மனுதர்மம் எனும் அடிமைசாசனத்தைத் தாண்டி சுதந்திர உலகம் என்று ஒன்று உண்டு, அங்கு அறிவியல் என்று ஒன்று உண்டு என நமக்குக் காட்டியவர்கள் அவர்கள்தான்
ஆரிய கலாச்சாரத்தின் ஊடுருவலால் நாசமாகப் போயிருந்த நம்மையும், சமஸ்கிருதம் கலந்திருந்த நம் மொழியையும் நாம் மீட்டெடுக்கத் துவங்கியதெல்லாம் பின்னர் நீதிக்கட்சி, திராவிட இயக்கம் என ஒவ்வொன்றாக நடந்த படிநிலைகள்
இந்தியாவின் ஏனைய தேசிய இனங்களுக்கும் ஆங்கிலேயர்கள் கல்வியைக் காட்டினார்களே தவிர அதை சரியாக அறுவடை செய்ய திராவிட இயக்கம் போன்றதொரு ஆதிக்க எதிர்ப்பு இயக்கம், சுய மரியாதை இயக்கம் அவர்களுக்கு வாய்க்கவில்லை
கம்யூனிசம் கூட இன்று பார்ப்பனர்களின் கூடாரமாக சுருங்கிப்போனதை நாம் பார்க்கிறோம்
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக ஒரு பெருந்தீமையையும் அவர்கள் நமக்குச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்! சிங்கங்களின் கூட்டத்தை நாகரீகமற்ற
பண்பற்ற கழுதைப்புலிகளின் கூட்டத்தோடு ஒட்டவைத்து விட்டுப் போய்விட்டார்கள்! எண்ணிக்கையில் அதிகம் என்கிற ஒரே காரணத்தினால் கழுதைப்புலிகள் நம்மை ஆள்வதைவிடவும் ஒரு பேரவலம் என்ன இருக்க முடியும்!
இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற!
-டான் அசோக்
ஜூன்19, 2019

சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா

சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா

சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா எனச் சிலர் கேட்கிறார்கள் ஆமாம்  சில இடங்களில் நடைமுறையில் இருந்தது!
முதலில் சோவியத் சட்ட அமைப்பு பற்றிய சுருக்கமான புரிதல் வேண்டும். அதனை நிகழ்காலத்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடலாம்
அதாவது, ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு குடியரசும் தனக்கென தனியான சட்ட்டங்கள் இயற்றி வைத்திருக்கலாம். அதே நேரம், எல்லோருக்கும் பொதுவான சோவியத் சட்டமும் இருக்கும்
தீர்ப்புகள் தவறென்று மேன்முறையீடு செய்தால், அல்லது சட்டங்களில் முரண்பாடுகள் காணப்பட்டால் சோவியத் சட்டமே இறுதியானது
அந்த வகையில், ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்த குடியரசுகளில் ஷரியா சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது
ஆனால் அது சோவியத் சட்ட அமைப்புடன் சமாந்தரமாக அமுல்படுத்தப் பட்டது. அதாவது, அந்த இடங்களில் இரண்டு வகையான நீதிமன்றங்கள் இயங்கும். ஒன்று சோவியத் நீதிமன்றம். மற்றது ஷரியா நீதிமன்றம்.
ஷரியா நீதிமன்றத்தை நாடுவதா அல்லது, சோவியத் நீதிமன்றத்தை நாடுவதா என்பது அங்குள்ள மக்களின் தெரிவு
இதன் மூலம் இரண்டு வகையான நீதித்துறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து எது முற்போக்கானது என்பதை மக்கள் தாமாக முடிவு செய்து கொள்வார்கள்
காலப்போக்கில் பெருமளவு வழக்குகள் சோவியத் நீதிமன்றங்களினால் தீர்க்கப் பட்டமை வரலாறு.
உண்மையில் ஷரியா நீதிமன்றங்கள், சோவியத் நீதிமன்றங்களுக்கு கீழ்ப்படிவானவை. அதன் அர்த்தம் நாகரிக உலகிற்கு மாறான தீர்ப்புகளை வழங்க முடியாது
உதாரணத்திற்கு, திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்ட வேண்டுமென ஷரியா நீதிமன்றம் தீர்ப்புக் கூறுவது தடுக்கப் பட்டிருந்தது
தற்காலத்தில் ஷரியா சட்டத்தை கொண்டிருக்கும் பாகிஸ்தான போன்ற நாடுகளிலும் இது போன்ற நிலைமை உள்ளது
ஷரியா நீதிமன்றத் தீர்ப்பில் அதிருப்தி அடைந்தவர்கள் சோவியத் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம்
உதாரணத்திற்கு, விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு பாதகமான தீர்ப்பு கூறப்பட்டால், பாதிக்கப்பட்ட பெண் சோவியத் நீதிமன்றம் சென்று தனக்குரிய நீதியை பெற்றுக் கொள்ள முடியும் இந்த விடயத்தில் சோவியத் சட்டமே இறுதியானது
பெரும்பாலான இஸ்லாமியர் அல்லாத மக்கள் மத்தியில் ஷரியா சட்டம் தொடர்பாக தவறான எண்ணம் காணப் படுகின்றது  உலகில் பல வகையான சட்ட அமைப்புகள் உள்ளன
உதாரணத்திற்கு இலங்கையில் இருப்பது ரோமன்- டச்சு சட்டம் எனப் பெயரிடப் பட்டுள்ளது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நெப்போலியன் காலத்து சட்டம் உள்ளது
அதே மாதிரி ஷரியா என்பதும் இஸ்லாமிய மதம் சார்ந்த பொதுவான சட்ட அமைப்பு தான் அதிலும் சட்டத் துறை சார்ந்த அறிஞர்கள் தமக்குள் முரண்படும் அளவிற்கு நான்கைந்து ஷரியா பிரிவுகள் உள்ளன
Kalaimarx 

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left